Monday 26 September 2022

#தமிழ்ப்பேரரசுகள்

 #தமிழ்ப்பேரரசுகள்

❤️
உலகிலேயே நீண்ட காலம் ஆட்சி செய்த பேரரசுகளின் பட்டியலில் முதல் நான்கில், மூன்று தமிழ் பேரரசு என்பதனை மாணவர்கள் கேட்டு அதிர்ந்தார்கள். அவர்களுக்குரிய பிரிட்டிஷ் பேரரசு நாற்பத்தி எட்டாவது இடத்தில் இருந்தது.
சேர ஆட்சிகாலம் - 430 கி.பி. - 1102 = 1532 ஆண்டுகள்
சோழ ஆட்சிகாலம் - 301 கி.பி. - 1279 = 1580 ஆண்டுகள்
பாண்டியர் ஆட்சிகாலம் - 580 கி.பி. -1345 = 1925 ஆண்டுகள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
நிலந்தரு திருவிற் பாண்டியன்
முதுகுடுமிப்பெருவழுதி
பெரும்பெயர் வழுதி
முடத்திருமாறன்
மதிவாணன்
பசும்பூண் பாண்டியன்
பொற்கைப்பாண்டியன்
இளம் பெருவழுதி
அறிவுடை நம்பி
பூதப்பாண்டியன்
வெற்றிவேற் செழியன்
கூடக் காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
உக்கிரப்பெருவழுதி
மாறன் வழுதி
நல்வழுதி
குறுவழுதி
இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியன்
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
நம்பி நெடுஞ்செழியன்
கடுங்கோன் → கி.பி. 575-600
அவனி சூளாமணி → கி.பி. 600-625
செழியன் சேந்தன் → கி.பி. 625-640
அரிகேசரி → கி.பி. 640-670
ரணதீரன் → கி.பி. 670-710
பராங்குசன் → கி.பி. 710-765
பராந்தகன் → கி.பி. 765-790
இரண்டாம் இராசசிம்மன் → கி.பி. 790-792
வரகுணன் → கி.பி. 792-835
சீவல்லபன் → கி.பி. 835-862
வரகுண வர்மன் → கி.பி. 862-880
பராந்தகப்பாண்டியன் → கி.பி. 880-900
மூன்றாம் இராசசிம்மன் → கி.பி. 900-945
அமரப்புயங்கன் → கி.பி. 930-945
சீவல்லப பாண்டியன் → கி.பி. 945-955
வீரபாண்டியன் → கி.பி. 946-966
வீரகேசரி → கி.பி. 1065-1070
மாறவர்மன் சீவல்லபன் → கி.பி. 1132-1162
சடையவர்மன் சீவல்லபன் → கி.பி. 1145-1150
பராக்கிரம பாண்டியன் → கி.பி.1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன் → கி.பி.1150-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன் → கி.பி. 1175-1180
விக்கிரம பாண்டியன் → கி.பி. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன் → கி.பி. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் → கி.பி. 1238-1239
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1239-1251
சடையவர்மன் விக்கிரமன் → கி.பி. 1241-1254
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் → கி.பி. 1251-1281
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் → கி.பி. 1268-1281
இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1276-1293
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் → கி.பி. 1422-1463
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் → கி.பி. 1473-1506
குலசேகர பாண்டியன் → கி.பி. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் → கி.பி. 1534-1543
பராக்கிரம குலசேகரன் → கி.பி. 1543-1552
நெல்வேலி மாறன் → கி.பி. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் → கி.பி. 1564-1604
வரதுங்கப்பாண்டியன் → கி.பி. 1588-1612
வரகுணராம பாண்டியன் → கி.பி. 1613-1618
கொல்லங்கொண்டான் → (தகவல் இல்லை)
❤️#சோழர்கள் ❤️
செம்பியன்
எல்லாளன்
இளஞ்சேட்சென்னி
கரிகால் சோழன்
மாற்றார் இடையாட்சி
நெடுங்கிள்ளி
நலங்கிள்ளி
கிள்ளிவளவன்
கோப்பெருஞ்சோழன்
கோச்செங்கணான்
பெருநற்கிள்ளி
விசயாலய சோழன் → கி.பி. 848–881
ஆதித்த சோழன் → கி.பி. 871–907
பராந்தக சோழன் I → கி.பி. 907–955
கண்டராதித்தர் → கி.பி. 955–962
அரிஞ்சய சோழன் → கி.பி. 962–963
சுந்தர சோழன் → கி.பி. 963–980
ஆதித்த கரிகாலன் → கி.பி. 966–971
உத்தம சோழன் → கி.பி. 971–987
இராசராச சோழன் I → கி.பி. 985–1014
இராசேந்திர சோழன் → கி.பி. 1012–1044
இராசாதிராச சோழன் → கி.பி. 1018–1054
இராசேந்திர சோழன் II → கி.பி. 1051–1063
வீரராஜேந்திர சோழன் → கி.பி. 1063–1070
அதிராஜேந்திர சோழன் → கி.பி. 1067–1070
குலோத்துங்க சோழன் I → கி.பி. 1070–1120
விக்கிரம சோழன் → கி.பி. 1118–1135
குலோத்துங்க சோழன் II → கி.பி. 1133–1150
இராசராச சோழன் II → கி.பி. 1146–1173
இராசாதிராச சோழன் II → கி.பி. 1166–1178
குலோத்துங்க சோழன் III → கி.பி. 1178–1218
இராசராச சோழன் III → கி.பி. 1216–1256
இராசேந்திர சோழன் III → கி.பி. 1246–1279
❤️#சேரர்கள் ❤️
பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் → கி.பி. 45-70
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் → கி.பி. 71-129
பல்யானைச்செல்கெழுகுட்டுவன் → கி.பி. 80-105
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் → கி.பி. 106-130
சேரன் செங்குட்டுவன் → கி.பி. 129-184
ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் → கி.பி. 130-167
அந்துவஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)
மாந்தரஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)
வாழியாதன் இரும்பொறை → கி.பி. 123-148
குட்டுவன் இரும்பொறை → (காலம் தெரியல)
பெருஞ்சேரல் இரும்பொறை → கி.பி. 148-165
இளஞ்சேரல் இரும்பொறை → கி.பி. 165-180
பெருஞ்சேரலாதன் → கி.பி. 180
கோப்பெருஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)
குட்டுவன் கோதை → கி.பி. 184-194
மாரிவெண்கோ → காலம் தெரியல
வஞ்சன் → காலம் தெரியல
மருதம் பாடிய இளங்கடுங்கோ → காலம் தெரியல
கணைக்கால் இரும்பொறை → காலம் தெரியல
கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை → காலம் தெரியல
பெருமாள் பாஸ்கர ரவிவர்மா → கி.பி. 8ஆம் நூற்றாண்டு
❤️#பல்லவப்பேரரசுகள் ❤️
பப்பதேவன்
சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன்
புத்தவர்மன்
விட்ணுகோபன் I
குமாரவிட்ணு I
கந்தவர்மன் I
வீரவர்மன்
கந்தவர்மன் II II கி.பி. 400 - 436
சிம்மவர்மன் I II கி.பி. 436 - 477
கந்தவர்மன் III
நந்திவர்மன் I
சிம்மவர்மன் III
சிம்மவிஷ்ணு கி.பி. 556 - 590
மகேந்திரவர்மன் I கி.பி. 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) கி.பி. 630 - 668
மகேந்திரவர்மன் II கி.பி. 668 - 669
பரமேஸ்வரவர்மன் கி.பி. 669 - 690
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கி.பி. 690 - 725
பரமேஸ்வரவர்மன் II கி.பி. 725 - 731
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) கி.பி. 731 - 796
தந்திவர்மன் கி.பி. 775 - 825
நந்திவர்மன் III கி.பி. 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) கி.பி. 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி) கி.பி. 850 - 882
அபராஜிதவர்மன் கி.பி. 882 - 901
இவண்
சோழன்.திரு.இங்கர்சால், நார்வே
வள்ளுவர் வள்ளலார் வட்டம்
பகிர்வு

Wednesday 9 June 2021

Tuesday 13 April 2021

தமிழ் வருடங்கள் பெயர்கள்

1. பிரபவ வருடம்
 2. விபவ வருடம் 
3. சுக்கில வருடம் 
4. பிரமோதூத வருடம் 
5. பிரசோற்பத்தி வருடம் 
6. ஆங்கீரச வருடம் 
7. ஸ்ரீமுக வருடம் 
8. பவ வருடம் 
9. யுவ வருடம் 
10. தாது வருடம் 
11. ஈசுர வருடம் 
12. வெகுதானிய வருடம் 
13. பிரமாதி வருடம் 
14. விக்கிரம வருடம் 
15. விஷு வருடம் 
16. சித்திரபானு வருடம் 
17. சுபானு வருடம் 
18. தாரண வருடம் 
19. பாரத்திப வருடம் 
20. விய வருடம் 
21. சர்வசித்து வருடம் 
22. சர்வதாரி வருடம் 
23. விரோதி வருடம் 
24. விகிர்த்தி வருடம் 
25. கர வருடம்
26. நந்தன வருடம் 
27. விஜய வருடம் 
28. ஜய வருடம் 
29. மன்மத வருடம் 
30. துர்முகி வருடம் 
31. ஏவிளம்பி வருடம் 
32. விளம்பி வருடம் 
33. விகாரி வருடம் 
34. சார்வாரி வருடம் 
35. பிலவ வருடம் 
36. சுபகிருது வருடம் 
37. சோபகிருது வருடம் 
38. குரோதி வருடம் 
39. விசுவாவசு வருடம் 
40. பராபவ வருடம் 
41. பிலவங்க வருடம் 
42. கீலக வருடம் 
43. சௌமிய வருடம் 
44. சாதாரண வருடம் 
45. விரோதிகிருது வருடம் 
46. பரிதாபி வருடம் 
47. பிரமாதீச வருடம் 
48. ஆனந்த வருடம் 
49. இராட்சத வருடம் 
50. நள வருடம் 
51. பிங்கள வருடம் 
52. காலயுத்தி வருடம் 
53. சித்தார்த்தி வருடம் 
54. ரௌத்திரி வருடம் 
55. துர்மதி வருடம் 
56. துந்துபி வருடம் 
57. ருதிரோற்காரி வருடம் 
58. இரத்தாட்சி வருடம் 
59. குரோதன வருடம் 
60. அட்சய வருடம்

Friday 29 January 2021

தமிழ் நூல்கள்

1. தேவாரம்
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா
5. திருப்பாவை
6. திருவெம்பாவை
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. இந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!
1.நற்றிணை
2.குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4.அகநானூறு
5.புறநானூறு
6.பதிற்றுப்பத்து
7.பரிபாடல்
8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !
1.திருமுருகாற்றுப்படை
2.சிறுபாணாற்றுப்படை
3.பெரும்பாணாற்றுப்படை
4.பொருநராற்றுப்படை
5.முல்லைப்பாட்டு
6.மதுரைக்காஞ்சி
7.நெடுநல்வாடை
8.குறிஞ்சிப் பாட்டு
9.பட்டினப்பாலை
10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!
1.திருக்குறள்
2.நாலடியார்
3.நான்மணிக்கடிகை
4.இன்னாநாற்பது
5.இனியவை நாற்பது
6.கார் நாற்பது
7.களவழி நாற்பது
8.ஐந்திணை ஐம்பது
9.திணைமொழி ஐம்பது
10.ஐந்திணை எழுபது
11.திணைமாலை நூற்றைம்பது
12.திரிகடுகம்
13.ஆசாரக்கோவை
14.பழமொழி
15.சிறுபஞ்சமூலம்
16.முதுமொழிக் காஞ்சி
17.ஏலாதி
18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!
1.சிலப்பதிகாரம்
2.மணிமேகலை
3.சீவக சிந்தாமணி
4. வளையாபதி
5. குண்டலகேசி
போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !
1.அகத்தியம்
2.தொல்காப்பியம்
3.புறப்பொருள் வெண்பாமாலை
4.நன்னூல்
5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!
1.கம்பராமாயணம்-வழிநூல்.
1.முத்தொள்ளாயிரம்
2.முக்கூடற்பள்ளு
3.நந்திக்கலம்பகம்
4.கலிங்கத்துப்பரணி
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!
ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்.. 1.தொன்மை
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை)
3.பொதுமைப் பண்புகள்
4.நடுவுநிலைமை
5.தாய்மைத் தன்மை
6.கலை பண்பாட்டுத் தன்மை
7.தனித்து இயங்கும் தன்மை
8.இலக்கிய இலக்கண வளம்
9.கலை இலக்கியத் தன்மை
10.உயர் சிந்தனை
11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!
https://www.facebook.com/groups/305917699863621/
சமய குரவர்கள்
----------------------------
1. திருஞானசம்பந்தர்
2. திருநாவுக்கரசர்
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
4. மாணிக்கவாசகர்
சைவம் வளர்த்தோர்
-----------------------------------
1. சேக்கிழார்
2. திருமூலர்
3. அருணகிரிநாதர்
4. குமரகுருபரர்
12 ஆழ்வார்கள்
---------------------------
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. மதுரகவி ஆழ்வார்
7. குழசேகராழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. திருப்பாணாழ்வார்
12. திருமங்கையாழ்வார்
-----------------------
தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!
------------------------------------------------------------
அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
தாயுமானவர்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்

பரணர்
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்

கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கம்பர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்

கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார் பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு பூதம்புல்லனார் பூதனார் பூதந்தேவனார் பெருங்கண்ணனார் பெருங்குன்றூர்க் கிழார் பெருங்கௌசிகனார் பெருஞ்சாத்தனார் பெருஞ்சித்திரனார் பெருந்தலைச்சாத்தனார் பெருந்தேவனார் பெருந்தோட் குறுஞ்சாத்தன் பெரும் பதுமனார் பெரும்பாக்கன் பெருவழுதி பேயனார் பேய்மகள் இளவெயினி பேராலவாயர் பேரிசாத்தனார் பேரெயின்முறுவலார் பொதுக்கயத்துக் கீரந்தை பொதும்பில் கிழார் பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி பொதும்பிற் புல்லாளல் கண்ணியார் பொத்தியார் பொய்கையார் பொருந்தில் இளங்கீரனார் பொன்மணியார் பொன்முடியார் பொன்னாகன் போதனார் போந்தைப் பசலையார் மடல் பாடிய மாதங்கீரனார் மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் மதுரை இனங்கௌசிகனார் மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார் மதுரைக் கணக்காயனார் மதுரைக் கண்டராதித்தனார் மதுரைக் கண்ணத்தனார் மதுரைக் கவுணியன் பூதத்தனார் மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் மதுரைக் காருலவியங் கூத்தனார் மதுரைக் கூத்தனார் மதுரைக் கொல்லன் புல்லன் மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் மதுரைச் சுள்ளம் போதனார் மதுரைத் தத்தங்கண்ணனார் மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார் மதுரைத் தமிழக் கூத்தனார் மதுரைப் படைமங்க மன்னியார் மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார் மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் மதுரைப் புல்லங்கண்ணனார் மதுரைப் பூதனிள நாகனார் மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் மதுரைப் பெருங்கொல்லன் மதுரைப் பெருமருதனார் மதுரைப் பெருமருதிளநாகனார் மதுரைப் போத்தனார் மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன் மதுரை வேளாசன் மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார் மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார் பூதனார் மருதம் பாடிய இளங்கடுங்கோ மருதனிளநாகனார் மலையனார் மள்ளனார் மாங்குடிமருதனார் மாடலூர் கிழார் மாதீர்த்தன் மாமிலாடன் மாமூலனார் மாயேண்டன் மார்க்கண்டேயனார் மாலைமாறன் மாவளத்தன் மாறோக்கத்துக் காமக்கண்ணியார் மாறோக்கத்து நப்பசலையார் மாற்பித்தியார் மிளைக் கந்தன் மிளைப் பெருங்கந்தன் மிளைவேள் பித்தன் மீனெறி தூண்டிலார் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் முடத்தாமக்கண்ணியார் முடத்திருமாறன் முதுகூத்தனார் முதுவெங்கண்ணனார் முப்பேர் நாகனார் முரஞ்சியயூர் முடிநாகராயர் முள்ளியூர்ப் பூதியார் முலங்கீரனார் மையோடக் கோவனார் மோசிக்கண்ணத்தனார் மோசிக்கீரனார் மோசிக்கொற்றன் மோசிக்கரையனார் மோசிசாத்தனார் மோசிதாசனார் வடநெடுந்தத்தனார் வடவண்ணக்கன் தாமோதரன் வடமோதங்கிழார் வருமுலையாரித்தி வன்பரணர் வண்ணக்கன் சோருமருங்குமரனார் வண்ணப்புறக் கந்தரத்தனார் வாடாப்பிராந்தன் வாயிலான் தேவன் வாயிலிலங்கண்ணன் வான்மீகியார் விட்டகுதிரையார் விரிச்சியூர் நன்னாகனார் விரியூர் நன்னாகனார் வில்லக விரலினார் விழிகட்பேதை பெருங்கண்ணனார் விற்றூற்று மூதெயினனார் விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் வினைத் தொழில் சோகீரனார் வீரை வெளியனார் வீரை வெளியன் தித்தனார் வெண்கண்ணனார் வெண்கொற்றன் வெண்ணிக் குயத்தியார் வெண்பூதன் வெண்பூதியார் வெண்மணிப்பூதி வெள்ளாடியனார் வெள்ளியந்தின்னனார் வெள்ளிவீதியார் வெள்வெருக்கிலையார் வெள்ளைக்குடி நாகனார் வெள்ளைமாளர் வெறிபாடிய காமக்கண்ணியார் வேட்டகண்ணன் வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன் வேம்பற்றுக் குமரன் ஒட்டக்கூத்தர் மற்றும் பெண்பாற்புலவர்கள்: --------------------------------------------------- அச்சியத்தை மகள் நாகையார் அள்ளுரர் நன்முல்லை ஆதிமந்தி - குறுந் 3 இளவெயினி - புறம் 157 உப்பை ஃ உறுவை ஒக்கூர் மாசாத்தியார் கரீனா கண்கணையார் கவியரசி கழார் கீரன் எயிற்றியார் கள்ளில் ஆத்திரையனார் காக்கை பாடினியார் நச்செள்ளையார் காமக்கணிப் பசலையார் காரைக்காலம்மையார் காவற்பெண்டு காவற்பெண்டு கிழார் கீரனெயிற்றியார் குட புலவியனார் குமிழிநாழல் நாப்பசலையார் குமுழி ஞாழல் நப்பசையார் குறமகள் ஃ இளவெயினி குறமகள் ஃ குறிஎயினி குற மகள் இளவெயினியார் கூகைக்கோழியார் தமிழறியும் பெருமாள் தாயங்கண்ணி - புறம் 250 நக்கண்ணையார் நல்லிசைப் புலமை மெல்லியார் நல்வெள்ளியார் நெட்டிமையார் நெடும்பல்லியத்தை பசலையார் பாரிமகளிர் பூங்கண்ணுத்திரையார் பூங்கண் உத்திரையார் பூதபாண்டியன் தேவியார் பெண்மணிப் பூதியார் பெருங்கோப்பெண்டு பேய்மகள் இளவெயினி பேயனார் பேரெயென் முறுவலார் பொத்தியார் பொன்மணியார் பொன்முடியார் போந்தலைப் பசலையார் மதுவோலைக் கடையத்தார் மாற்பித்தியார் மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி மாறோக்கத்து நாப்பசலையார் முள்ளியூர் பூதியார் முன்னியூப் பூதியார் வரதுங்க ராமன் தேவியார் வருமுலையாருத்தி வில்லிபுத்தூர்க் கோதையார் வெண்ணிக் குயத்தியார் வெள்ளி வீதியார் வெறிபாடிய காமக்கண்ணியர். சித்தர்கள்: பதினெண் சித்தர்: 1. திருமூலர் 2. இராமதேவர் 3. கும்பமுனி 4. இடைக்காடர் 5. தன்வந்திரி 6. வான்மீகி 7. கமலமுனி 8. போகநாதர் 9. குதம்பைச் சித்தர் 10. மச்சமுனி 11. கொங்கணர் 12, பதஞ்சலி 13. நந்திதேவர் 14. போதகுரு 15. பாம்பாட்டிச் சித்தர் 16. சட்டைமுனி 17. சுந்தரானந்த தேவர் 18. கோரக்கர் இது ஒரு பட்டியல். 1. அகப்பேய் சித்தர் 2. அழுகணிச் சித்தர் 3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர் 4. சதோகநாதர் 5.இடைக்காட்டுச் சித்தர் 6. குதம்பைச் சித்தர் 7. புண்ணாக்குச் சித்தர் 8. ஞானச்சித்தர் 9. மௌனச் சித்தர் 10. பாம்பாட்டிச் சித்தர் 11. கல்லுளி சித்தர் 12.கஞ்சமலைச் சித்தர் 13. நொண்டிச் சித்தர் 14. விளையாட்டுச் சித்தர் 15. பிரமானந்த சித்தர் 16. கடுவெளிச் சித்தர் 17. சங்கிலிச் சித்தர் 18. திரிகோணச்சித்தர் இது மற்றொரு பட்டியல். இந்தப் பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர். 1. வான்மீகர் 2. பதஞ்சலியார் 3. துர்வாசர் 4. ஊர்வசி 5. சூதமுனி, 6. வரரிஷி 7. வேதமுனி 8. கஞ்ச முனி 9. வியாசர் 10. கௌதமர் - இது இன்னொரு பட்டியல். பெரிய ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது. 1. காலாங்கி 2. கமலநாதர் 3. கலசநாதர் 4. யூகி 5. கருணானந்தர் 6. போகர் 7. சட்டைநாதர் 8. பதஞ்சலியார் 9. கோரக்கர் 10. பவணந்தி 11. புலிப்பாணி 12.அழுகணி 13. பாம்பாட்டி 14. இடைக்காட்டுச் சித்தர் 15. கௌசிகர் 16. வசிட்டர் 17. பிரம்மமுனி 18. வியாகர் 19. தன்வந்திரி 20. சட்டைமுனி 21. புண்ணாக்கீசர் 22. நந்தீசர் 23, அகப்பேய் 24. கொங்கணவர் 25. மச்சமுனி 26. குருபாத நாதர் 27. பரத்துவாசர் 28. கூன் தண்ணீர் 29. கடுவெளி 30. ரோமரிஷி 31. காகபுசுண்டர் 32. பராசரர் 33. தேரையர் 34. புலத்தியர் 35. சுந்தரானந்தர் 36. திருமூலர் 37. கருவூரார் 38, சிவவாக்கியர் 39. தொழுகண் 40. நவநாதர் (அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்) 41. அஷ்ட வசுக்கள் 42. சப்த ரிஷிகள். இப்படிச் சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. கிடைத்தவை இவைமட்டுமே. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய ப்ரியமான மொழி எம் தாய்மொழி தமிழ்..! இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது... பெருமை கொள்வோம் தமிழரென்று.. !!

Friday 15 November 2019

சோழப் பேரரசர் ராஜ ராஜ சோழன்

மாமன்னர் ராஜ ராஜ சோழன் உருவாக்கிய பிரகதீஸ்வரர் கோயிலில்
தாய்ப்பாலில் எரிந்த பெரு உடையார் கோவில் தீபம்...
அழியாத வரலாற்று உண்மை.
சோழப் பேரரசர் ராஜ ராஜ சோழனின் அரண்மனை.
ஒருநாள் மன்னனைப் பார்த்து ‘சோழப்பேரரசே கோவிலுக்காகக் கொடுத்த நன்கொடைகள் ஏராளம் இருந்தாலும், உங்கள் திருமுகத்தில் தீராத கவலை படிந்திருக்கிறதே என்ன காரணம் என்ன?’ என்றார் அமைச்சர்.
மன்னர் கண்மூடி யோசித்தார்.
நெடுங்காற்றை உள்வாங்கி சீராக மூச்சு விட்டார்.
கண் திறந்தார்.
நிதானமான குரலில் பேசத் தொடங்கினார்.
‘சோழப்பேரரசின் அடையாளம் இந்தப்பெருவுடையார் கோவிலின் மூலம் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கும் அழியக் கூடாது என்றுதான் கவலைப்படுகிறேன்.
அரண்மனைகள் தனிச் சொத்து, ஆலயங்கள் மக்கள் சொத்து என்று கருதப்படுமாயின் மக்களுக்கும் இதில் பங்கு இருக்க வேண்டும்.
சோழ மண்டலத்தில் கடைக்கோடியில் சிற்றூரில் வாழும் மக்களும் இந்த ஆலயத்தின் பங்குதாரர்களாக மாற்றி விடும் திட்டத்தைத்தான் சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன்’ என்றார் மன்னர்.
‘திட்டம் என்ன மன்னா?’ அமைச்சர் கேட்டார்.
‘அதோ அந்தத் திரு விளக்குகள் செல்வந்தர்களின் நேர்த்திக் கடன்களால் எரிகின்றன. தினந்தோறும் கோவில்களில் தீபங்கள் எரிய வேண்டும். அதற்காக விவசாயத்தை காக்கும் கோ என்று கோயிலில் வாழும் நம் மாடுகளையும் ஏழைகளுக்கு வழங்கப் போகிறேன்.
அதற்குப் பதிலாக அவர்கள் திரு விளக்குகள் எரிய சுத்தமான நெய் இறைவனுக்கு தந்தால் மட்டும் போதும். மொத்த வருமானமும் அவர்களுக்கே.
அதாவது ஏழையின் அடுப்பும், ஆலயத்தின் திருவிளக்கும் ஒரே திரியில் எரியும். இந்த ஆலயத்தோடு அடித்தட்டு மக்களுக்கு உறவு மேம்படும். இதுதான் என் திட்டம், சரியா?’ என்றார் மா மன்னர்.
‘மிகச் சரியானது மன்னா’ என்று வணங்கினார் அமைச்சர்.
அரசன் ஆணை பிறப்பித்தார்.
‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும். கோ எனும் நம் உழவை காக்கும் மாடுகளை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுங்கள். எந்த நிலையிலும் நிபந்தனை வழங்காது கட்டுப்பாடு வகுத்து கண்காணியுங்கள் என்றார் மன்னர்.
ஒருநாள் கோவில்களைச் சுற்றி வரும் பொழுது ஒரு கோவிலில் மட்டும் விளக்கு எரியவில்லை.
காரணம் கேட்டறிந்தார்.
எவத்தூர் மாராயன் என்பவனுக்கு 42 பசு மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவனுடைய கட்டுப்பாட்டில் எரிய வேண்டிய விளக்கு கடந்த ஏழு நாட்களாக எரியவில்லை என்பதை அறிந்தார்.
‘எவனவன், இறைவன் கட்டளையை நிறைவேற்ற மறுப்பவன். பூட்டுங்கள் தேரை, ஓட்டுங்கள் எவத்தூருக்கு’ என்றார் மன்னர்.
காலி மனையால் சூழப்பட்ட ஒரு குடிசையின் முன் மன்னரின் தேர் நின்றது.
‘பேரரசன் வந்திருக்கிறார், மாராயா வெளியே வா’ என்று குரல் கொடுத்தனர்.
உள்ளே ஒரு பெண்ணின் விசும்பலும் குழந்தையின் அழு குரலும் கேட்டது.
சற்று நேரத்தில் கதவைத் திறந்து கசங்கிய சேலையும், கலைந்த கூந்தலும், கலங்கிய கண்களுமாய் பெண்ணொருத்தி வெளியே வந்தாள்.
அவளது இடுப்பில் நாராய் தொங்கிக் கொண்டிருந்தது, சவலை பாய்ந்த குழந்தை ஒன்று. பேரரசரைக் கண்டதும் அஞ்சி நடுங்கி கீழே விழுந்தாள்.
‘எழுந்திரு பெண்ணே! நீ யார்?’.
‘நாந்தாங்க மாராயன் பொஞ்சாதி’.
‘உன் கணவன் எங்கே?’.
‘என் புரு‌ஷனும், ராசா கொடுத்த மாடுகளும் போன மாசம் காவிரி வெள்ளத்தில் ஆத்தோடு போயிருச்சி...’
அவள் சொல்வது மெய்யா என்பது போல திரும்பிப் பார்த்தார். ஆம்! என்று வருத்தத்தோடு தலை அசைத்தனர் கூடி நின்ற பொது மக்கள்.
‘உனக்காக வருந்துகிறேன்.
ஆனால் ஒரு கேள்வி.
கடந்த மாதம் இறந்தார் என்கிறாய்.
ஏழு நாட்களுக்கு முன்பு வரை திருவிளக்கு எரிந்திருக்கிறது.
கணவனும், மாடுகளும் இறந்த பின் இருபத்து மூன்று நாட்கள் எப்படி நீ விளக்கு எரித்தாய்?’.
அவள் தேம்பித் தேம்பி அழுதாள். இடுப்பில் நழுவிய குழந்தையை மார்போடு கட்டிக் கொண்டு, ‘அதை மட்டும் கேட்காதீர்கள் மன்னா’ என்று கண் கலங்கினாள்.
‘பெண்ணே! அஞ்சாதே உண்மையைச் சொல்’.
‘சொல்கிறேன் மன்னா!.
புரு‌ஷன் செத்துப் போயிட்டாலும் ராசாவுக்குக் கொடுத்த வாக்கை மீறக்கூடாது பாருங்க. அதனால என் தாய்ப்பாலை விற்று மூணு ஆளாக்கு நெய் வாங்கி தீபத்தை எரிய வச்சேன். ஒரு வாரமாய் தாய்ப்பால் வத்திப் போச்சு, திரு விளக்கு அத்துப் போச்சு.
எங்களை மன்னிச்சிருங்க மகராசா’ என்று குழந்தையோடு தேரின் காலடியில் விழுந்தாள்.
நடந்ததை அறிந்த பெருமூச்சு விட்ட மன்னர் ராஜராஜன் துடிதுடித்துப் போனான்.
கண்கள் கலங்கியது.
தேகம் சிலிர்த்தது.
தேரை விட்டு கீழ. இறங்கி தாயையும் குழந்தையையும் சேர்த்தெடுத்து ‘உன்னைப் போன்றவர்களால்தான் பெருமை அடைகிறது என் சோழப்பேரரசு.
இன்று முதல் இந்தத்தாயை திருமஞ்சனப் பணிப்பெண்ணாக நியமிக்கின்றேன். அரண்மனை சிற்பியை அழைத்து தாய்ப்பாலால் விளக்கு எரித்த இவள் பெயரை கல் வெட்டில் பொறித்து விடுங்கள்’ என்றார் ராஜ ராஜ சோழ மகாராஜா.
என்ன ஒரு ஆட்சி.
என்ன ஒரு தர்மம்.
இதை கண்டு பொறுக்க இயலாத மேசானியர்களின் செயலை உணருங்கள்.
அதிகமாய் பகிருங்கள்.